Published : 03 May 2016 09:24 AM
Last Updated : 03 May 2016 09:24 AM

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுப்பு

வாக்குப்பதிவு நாளான மே 16-ம் தேதி அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் விடுப்பு வழங்குமாறு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் பி.போஸ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, சட்டப் பிரிவு 135பி-ன்படியும், தேர்தல் ஆணையத் தின் வழிகாட்டுதல்படியும், தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் அவற்றில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர் கள், தினக்கூலி தொழிலாளர்கள் அனைவருக் கும் தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 16-ம் தேதி (திங்கள்கிழமை) தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x