44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்

44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஜெயலலிதா வீட்டு கிரகப்பிரவேசம்
Updated on
1 min read

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அவரது போயஸ் தோட்ட இல்லத்தின் கிரகப்பிரவேசம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ கிரகப்பிரவேசம் 44 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1972-ம் ஆண்டு மே 15-ம் தேதி நடந்துள்ளது.

கிரகப்பிரவேச அழைப்பிதழ் மிக எளிமையாகவும், அதே நேரம் மிகுந்த ரசனையுடனும் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கைவினைத் திறன்மிக்க இரு கதவுகள் திறந்தவுடன் அழைப்பு வாசகங்கள் அமைந்திருக் குமாறு உள்ள இந்த பத்திரிகையை, பம்பாய் வாகில் நிறுவனம் வடி வமைத்திருந்தது.

முகவரி விளக்கம்

கிரகப்பிரவேசத்துக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் இடம் தேடி அலையக்கூடாது என்பதற்காக, ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு பின்புறம் - ரயில்வே தேர்வாணைய அலுவலகத்துக்கு அருகில் - கதீட்ரல் சாலை’ என மிக விளக்கமாக இதில் முகவரி குறிப்பிடப்பட்டுள்ளது.

கிரகப்பிரவேசத்தை முன்னிட்டு மாலை விருந்தின்போது பிரபல இசைக்கலைஞர் சிட்டி பாபுவின் வீணைக் கச்சேரி நடப்பதாகவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in