Published : 16 May 2022 05:50 AM
Last Updated : 16 May 2022 05:50 AM

இந்து தமிழ் திசை: பெருந்துறை நிவேதா கலைக் கழகம் சார்பில் அலங்கார மலர் செய்யும் ஓரிகாமி பயிற்சி | மே 20, 21, 22-ல் ஆன்லைனில் நடைபெறுகிறது

சென்னை

சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை, கைவினைக் கழகம் இணைந்து நடத்தும் அலங்காரப் பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் 20-ம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

கோடை விடுமுறையில் வீட்டில்இருக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பூக்கள் செய்யும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் நடத்தப்படுகிறது. வரும் 20, 21, 22-ம் தேதிகளில் தினமும் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இந்த பயிலரங்கு நடக்க உள்ளது. 3-ம் வகுப்பு முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம்.

இப்பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகள் கற்றுத்தரப்பட உள்ளன. உள்அலங்காரங்கள் செய்ய இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்கும்போது, போதுமான இடவசதியுடன், நல்ல வெளிச்சம் உள்ள மேஜையில் அமர்ந்திருக்க வேண்டியது அவசியம்.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00547 என்ற லிங்க்கில் ரூ.353 பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்றசெல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x