Published : 13 May 2022 04:32 PM
Last Updated : 13 May 2022 04:32 PM

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கு: காவல்துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியதை ரத்து செய்யக்கோரி நடிகை சாந்தினி தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை மற்றும் மணிகண்டன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி விட்டதாக நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகை சாந்தினி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சரான மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கும்போது உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், இந்த வழக்கை திசை திருப்பும் வகையில் இடம்பெற்றுள்ள சில பகுதிகளை நீக்க வேண்டும். மேலும் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் மணிகண்டனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x