Published : 12 May 2022 06:37 AM
Last Updated : 12 May 2022 06:37 AM

திருப்பூரில் உரிய நேரத்தில் ரேஷன் கடை திறக்கப்படாததால் பொதுமக்கள் அவதி

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி காங்கயம் சாலை 45-வது வார்டு சுகுமார் நகரில் செயல்பட்டு வரும் ரேஷன் கடை உரிய நேரத்தில் திறக்கப்படுவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சுகுமார் நகர் ரேஷன் கடையை உரிய நேரத்தில் திறக்காததால், மாதந்தோறும் பொருட்களை உரிய காலத்துக்குள் பெற முடிவதில்லை. வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அதிகளவில் இப்பகுதியில் வசித்து வரும் நிலையில், ரேஷன்கடை பெரும்பாலான நேரங்களில் பூட்டியே உள்ளது. ரேஷன் பொருட்களையே எதிர்பார்த்து காத்திருக்கும் தொழிலாளர்கள் பலர், உரிய நேரத்தில் பணிக்கு செல்ல முடிவதில்லை.

கடைக்கு அவ்வப்போது வரும் விற்பனையாளரிடம் முறையிட்டால், 2 கடைகளை தான் கவனிக்க வேண்டியுள்ளதால் உரியநேரத்தில் கடையை திறக்கமுடியவில்லை என்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற ரேஷன் கடையில் பணியாற்றும் விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமில், ரேஷன் கடைகளை உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, சுகுமார் நகரில் செயல்படும் ரேஷன்கடையை உரிய நேரத்தில் திறக்க மாவட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதி ரேஷன் கடைக்கு தனி விற்பனையாளரை நியமிக்க வேண்டும். அதேபோல மழைக்காலங்களில், ரேஷன்கடை முன்புசேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.இதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x