Published : 16 May 2016 05:36 PM
Last Updated : 16 May 2016 05:36 PM

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை: துரைமுருகன்

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், காந்தி நகரில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை இன்று பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'திமுக அமோக வெற்றி பெறும். இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகிவிட்டது.

அரவங்குறிச்சி, தஞ்சாவூர் போன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையத்திடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். மேலும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x