Published : 10 May 2022 06:36 PM
Last Updated : 10 May 2022 06:36 PM

தமிழகத்தில் 2019-20-ல் ரூ.18,538 கோடி நஷ்டத்தை சந்தித்த 29 பொதுத்துறை நிறுவனங்கள்: சிஏஜி

சென்னை: 2019-20 ஆம் ஆண்டு காலத்தில் தமிழகத்தில் 29 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.18,538 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகம், மின்சார வாரிம் என்று 60 பொதுத் துறை நிறுவனங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது.

இதன்படி 2015 - 16-ம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.14,822 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தன. இதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் இந்த நஷ்டம் அதிகரித்து கொண்டுள்ளது.

2019 - 20-ம் ஆண்டில் ரூ.17,243 கோடி நஷ்டத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2019- 20-ம் ஆண்டில் மட்டும் 60 பொதுத்துறை நிறுவனங்களில் 24 நிறுவனங்கள் ரூ.1,340 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. 29 நிறுவனங்கள் ரூ.18,538 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x