Published : 28 May 2016 09:39 AM
Last Updated : 28 May 2016 09:39 AM
கர்னாடக இசை மேதை ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை சாதனைகளை விளக்கும் வகையில் ‘குறையொன்றும் இல்லை’ என்ற நிகழ்ச்சியை ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வாரம்தோறும் வழங்கி வருகிறது. 35-வது அத்தியாயத்துக்கு மேலாக இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடரின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 2 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பல கலைநிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி இன்று நேரலையாக ஒளிபரப்ப உள்ளது. இதனால், இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடரான ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சி இடம்பெறாது. அடுத்த சனிக்கிழமை ஜூன் 4-ம் தேதி இரவு 9.30 மணிக்கு, வழக்கம்போல ‘குறையொன்றும் இல்லை’ நிகழ்ச்சியை நேயர்கள் கண்டுகளிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT