Published : 28 May 2016 09:39 AM
Last Updated : 28 May 2016 09:39 AM

பொதிகை டிவியில் இன்று எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சி இடம்பெறாது

கர்னாடக இசை மேதை ‘பாரத ரத்னா’ எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு மற்றும் இசை சாதனைகளை விளக்கும் வகையில் ‘குறையொன்றும் இல்லை’ என்ற நிகழ்ச்சியை ‘தி இந்து’ நாளிதழுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி வாரம்தோறும் வழங்கி வருகிறது. 35-வது அத்தியாயத்துக்கு மேலாக இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வாரம்தோறும் சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் இத்தொடரின் மறு ஒளிபரப்பை செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் 2 ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக பல கலைநிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சி இன்று நேரலையாக ஒளிபரப்ப உள்ளது. இதனால், இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கைத் தொடரான ‘குறையொன்றுமில்லை’ நிகழ்ச்சி இடம்பெறாது. அடுத்த சனிக்கிழமை ஜூன் 4-ம் தேதி இரவு 9.30 மணிக்கு, வழக்கம்போல ‘குறையொன்றும் இல்லை’ நிகழ்ச்சியை நேயர்கள் கண்டுகளிக்கலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x