Published : 05 May 2016 09:35 AM
Last Updated : 05 May 2016 09:35 AM
தருமபுரி மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா வேன் பிரச்சாரம் மேற்கொண்டார். தருமபுரி அடுத்த நல்லம்பள்ளியில் பிரச்சாரத்தை நிறைவு செய்து அவர் பேசியது: அதிமுக இனி லெட்டர் பேடு கட்சியாகப் போகிறது. திமுக, இல்லாமல்போன கட்சியாகி விட்டது. பல்வேறு சேனல்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகள் அனைத்துமே கருத்து திணிப்புகள்தான். மத்திய உளவுத்துறையின் அறிக்கை ஒன்று எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில், ‘தமிழகத்தில் 130 முதல் 160 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்த் முதல்வராவதும் கூட்டணி தலைவர்கள் அமைச்சர்கள் ஆவதும் உறுதி. இந்த கூட்டணி தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை தரப்போகிறது. எனவே நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் உங்கள் வாக்குகளை வீணாக்கி விடாதீர்கள். தமிழக மக்களின் வளர்ச்சி முக்கியம். எனவே மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT