Published : 04 May 2016 02:06 PM
Last Updated : 04 May 2016 02:06 PM

அதிமுகவில் பணம் பெற்று போட்டியிடுவதாக பொய் பிரச்சாரம்: ஜான்பாண்டியன் மறுப்பு

அதிமுகவிடம் பணம் பெற்றுக் கொண்டு நாங்கள் தேர்தலில் நிற்பதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

அதிமுகவில் எங்களுக்கு அங்கீகாரம் வழங்காததால் வெளியேறினோம். திருவாடானை தொகுதியில் ஜாதி பெயரில் உள்ள அமைப்புக்கு அதிமுக தொகுதியை ஒதுக்கி வேட்பாளராக கருணாசை நிறுத்தியுள்ளது. இதன் மூலம் மற்ற சமுதாய மக்கள், அதிமுக தொண்டர்கள் ஆகியோரது வெறுப்பை அக்கட்சி சம்பாதித்துள்ளது. நடிகர் கருணாஸ் கடந்த பிப்ரவரியில் முகவரி என்ற பத்திரிகை தொடங்கியுள்ளார். அதில் திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் வாழ்த்துச் செய்தி பெற்று பதிவு செய்துள்ளார். திமுகவுக்கு ஆதரவான இவர் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இத்தொகுதி திமுக வேட்பாளர் திவாகரன் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தொகுதியில் 50 ஆண்டுகளாக குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.

தமிழகம் முழுவதும் 52 தொகுதிகளில் எங்கள் வேட்பாளர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். அதிமுகவிடம் பணம் பெற்றுக்கொண்டு நான் போட்டியிடுவதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

இத்தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காகப் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x