Published : 17 May 2016 09:10 AM
Last Updated : 17 May 2016 09:10 AM
சென்னையில் தேர்தல் அமைதி யாக நடந்து முடிந்தது என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லா வட சென்னை பகுதி வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர் களிடம் கூறுகையில், "சென்னை யில் மக்கள் அனைவரும் ஆர்வமு டன் வாக்களித்தனர். சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டிருந்தன. போலீஸார் பார பட்சம் இன்றி பணி செய்தார்கள். ஆங்காங்கே சிறுசிறு குற்ற சம்ப வங்களை தவிர, வேறு பெரிய அசம்பாவிதம் எதுவும் நடை பெறவில்லை. காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் குறைவான அளவி லேயே புகார்கள் வந்துள்ளன. மொத்தத்தில் சென்னை முழுவதும் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT