Published : 12 May 2016 09:32 AM
Last Updated : 12 May 2016 09:32 AM

நோட்டா வாக்குகள்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

வெற்றி பெற்ற வேட்பாளர் பெற்ற வாக்குகளை விட நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் அந்த தேர்தலை ரத்து செய்துவி்ட்டு மறுதேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய் யப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த வழக்க றிஞர் டி.துரைவாசு என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில், ‘நோட்டாவில் பதிவாகும் வாக்குகள், வெற்றி பெறும் வேட்பாளர் பெறும் வாக்கு களை விட அதிகமாக இருந்தால், அந்த தேர்தலை செல்லாது என அறிவித்து மறு தேர்தல் நடத்தும் வகையில் விதிமுறைகளில் மாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். அதேபோல மருத்துவமனை மற்றும் வீடுகளில் படுத்த படுக்கையாக இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை கால நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.வி.முரளித ரன் ஆகியோர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதிகள் நோட்டாவில் பதிவாகும் வாக்குகள் அதிகமாக இருந்தால் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப்பே ாகிறது என்பது குறித்து விரிவாக பதிலளிக்க உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x