Published : 19 May 2016 11:38 AM
Last Updated : 19 May 2016 11:38 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 135 தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோடி தனது ட்விட்டரில், "சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.
காலை 11 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 135 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 86 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT