Published : 30 Apr 2016 06:35 PM
Last Updated : 30 Apr 2016 06:35 PM

மே தினத்தில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை: இன்றே அலைமோதிய கூட்டம்

மே தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மே தினத்தை முன்னிட்டு மே 1-ம் தேதியன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமையான விடுமுறை நாளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதை முன்பே அறிந்ததால், நேற்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமிருந்தது.

இது தொடர்பாக டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சிலர் கூறுகையில், “ டாஸ்மாக் விற்பனையை நிறுத்துவதற்காக ‘Nil day’ என்று குறிப்பிட்ட சில நாட்கள் உள்ளன. அந்த வகையில், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தன்றும் கடைகள் மூடப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த முறை மே 1-ம் தேதி வெள்ளிக்கிழமை வந்தது. இதனால் அப்போது, வியாழக்கிழமையன்று ஓரளவே விற்பனை இருந்தது.

ஆனால், இந்தாண்டு மே 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், சனிக்கிழமையான இன்றைய தினம், டாஸ்மாக் விற்பனை அதிகளவில் இருந்தது. சராசரியாக வார நாட்களில் டாஸ்மாக் வருமாணம் ஒரு நாளைக்கு சுமார் ரூ.70 கோடி வரை இருக்கும். இதுவே, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் மற்ற நாட்களைவிட டாஸ்மாக் மதுபான விற்பனை 10 சதவீதம் திகமாக இருக்கும். தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சனிக்கிழமை வழக்கமான வார இறுதி நாட்களைவிட 15 சதவீதம் அதிகமாக விற்பனையானது.

இவ்வாறு அவர் கூறினார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x