Published : 11 May 2016 09:45 AM
Last Updated : 11 May 2016 09:45 AM
விவசாயிகளின் மொத்த கடன்களையும் ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ள மக்கள் நலக் கூட்டணிக்கு தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அறிவித்துள்ளது.
அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் ரகுநாத் தாதா பாட்டீல் (மகாராஷ்டிரா), செங்கல் ரெட்டி (ஆந்திரம்), சத்நாம் சிங்பேரு (பஞ்சாப்), கொடியகல்லி சந்திரசேகர் (கர்நாடகா), தமிழக விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று கூட்டாக அளித்த பேட்டி:
நாடு முழுவதும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ், பாஜக கட்சிகளால் விவசாயிகள் நலன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயிகளின் பாதிப்புக்கு திமுக, அதிமுகதான் முக்கிய காரணம்.
கடன் தள்ளுபடி
தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளுமே கூட்டுறவு வங்கி கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியுள்ளன. 11.50 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். ஆனால், 78.50 லட்சம் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். எனவே, விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ள தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணிக்கு தேர்தலில் ஆதரவு அளிப்பதென முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT