Published : 02 May 2022 06:48 AM
Last Updated : 02 May 2022 06:48 AM

"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை" - அரசு தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: இஸ்லாமியர்கள் கடந்த ஏப்.3-ம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கினர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘ஷவ்வால் பிறை மே 1-ம் தேதி (நேற்று) தென்படவில்லை. எனவே, மே 3-ம் தேதி (நாளை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x