Published : 15 May 2016 09:37 AM
Last Updated : 15 May 2016 09:37 AM

நுழைவுத்தேர்வு மீண்டும் வர காரணமான என்ஜிஓ அமைப்பு மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், மருத்துவப் பொது நுழைவுத் தேர்வால் பாதிக் கப்பட்ட மாணவர்கள், பெற்றோர் கள் கூட்டமைப்பு இணைந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ரத்து செய்யக்கோரி சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) வளாகத்தில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.

இதுகுறித்து டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

மத்திய அரசு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஏற்கெனவே தமிழகத்தில் அமலில் உள்ள 2007-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 254(2) சட்டத்தின்படி பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

இந்த நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட் டத்தில் படிக்கும் 4 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பயன் பெறுவார்கள். மருத்துவம் படித்து டாக்டராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

தடையில் இருந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டுவருவதற்கு ‘சங்கல்ப் சாரிடபிள் டிரஸ்ட்’ என்ற என்ஜிஓ அமைப்பு காரணமாக இருந்துள்ளது. மாணவர்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத அந்த என்ஜிஓ அமைப்பின் மீது சிபிஐ விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வரும் 17-ம் தேதி வெளிவர உள்ளது. அதன்பின் அடுத்தக் கட்ட நடவடிக்கை பற்றி தெரிவிக்கப்படும்.

இவ்வாறு டாக்டர் பி.பாலகிருஷ் ணன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x