காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி

காரைக்கால் தக்களூரில் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற 5 தேர் பவனி
காரைக்கால் தக்களூரில் புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழாவையொட்டி நடைபெற்ற 5 தேர் பவனி
Updated on
1 min read

காரைக்கால் தக்களூரில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய ஆண்டுத் திருவிழா தேர் பவனி நேற்று இரவு நடைபெற்றது.

தக்களூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற புனித செபஸ்தியார் ஆலயத்தில், ஆண்டு தோறும் 10 நாட்கள் சிறப்பான வகையில் ஆண்டுத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.நிகழாண்டு திருவிழா கடந்த ஏப்.21 ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள் தோறும் மாலை சிறிய தேர் பவனி, 29 ம் தேதி 3 தேர் பவனி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான மின் விளக்குகள் அலங்காரத்துடன் கூடிய 5 தேர் பவனி நேற்று(ஏப்.30) இரவு நடைபெற்றது. முன்னதாக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. இந்நிகழ்வுகளில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

விழா நிறைவாக இன்று(மே 1) காலை திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கம் செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in