Published : 01 May 2022 04:15 AM
Last Updated : 01 May 2022 04:15 AM

தனுஷ்கோடிக்கு அகதிகளாக வர முயன்ற 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேசுவரம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, அந்நாட் டிலிருந்து இலங்கைத் தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். மார்ச் 22-ம் தேதியிலிருந்து இதுவரை 75 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை காங்கேசன்துறை கடற்கரை யிலிருந்து தனுஷ்கோடிக்கு வர முயன்ற 13 இலங்கை தமிழர்களை அந்நாட்டு கடற்படையினர் ரோந்துப் பணியின்போது கைது செய்தனர். திருகோணமலையைச் சேர்ந்த 5 ஆண்கள், 3 பெண் கள் மற்றும் 5 குழந்தைகள் ஆகிய 13 பேர், யாழ்ப்பாணம் காங்கேசன் துறையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வர முயன்றது கடற்படையினரின் விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், 13 பேரும் காங்கேசன்துறை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x