Published : 29 May 2016 10:21 AM
Last Updated : 29 May 2016 10:21 AM
ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தியில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதியின் பொறுப்பில் இருந்த வக்ஃபு வாரியம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் வக்ஃபு வாரியம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 26-ம் தேதி மேலும் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒருவரான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த நிலோபர் கபீலிடம் வக்ஃபு வாரியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது முதல்முறையாக சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. தற்போது 2-வது முறையாக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT