2-வது முறையாக இலாகா மாற்றம்: அமைச்சர் நிலோபர் கபீலிடம் வக்ஃபு வாரியம் ஒப்படைப்பு

2-வது முறையாக இலாகா மாற்றம்: அமைச்சர் நிலோபர் கபீலிடம் வக்ஃபு வாரியம் ஒப்படைப்பு
Updated on
1 min read

ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தியில், ‘முதல்வர் ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதியின் பொறுப்பில் இருந்த வக்ஃபு வாரியம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நிலோபர் கபீலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்துள்ளது. கடந்த 23-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மற்றும் 28 அமைச்சர்கள் பதவியேற்றனர். அப்போது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதியிடம் வக்ஃபு வாரியம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு கடந்த 26-ம் தேதி மேலும் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒருவரான முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த நிலோபர் கபீலிடம் வக்ஃபு வாரியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டபோது முதல்முறையாக சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்பட்டன. தற்போது 2-வது முறையாக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in