Published : 30 Apr 2022 05:58 AM
Last Updated : 30 Apr 2022 05:58 AM

தலைமைச் செயலராக இருப்பதால் சிறந்த நூலுக்கான பரிசை ஏற்க முடியாது: இறையன்பு

சென்னை: தலைமைச் செயலராக இருப்பதால், சிறந்த நூலுக்கான பரிசை ஏற்க முடியாது என்று வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ் வளர்த் துறைச் செயலர் மகேசன் காசிராஜனுக்கு, இறையன்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, 2018-ல் வெளிவந்த நூல்கள் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பரிசு குறித்த விவரங்கள் 2021 பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்பட்டன.

இதில் என் நூலான, ‘மூளைக்குள் சுற்றுலா’ தேர்வு செய்யப்பட்டு, அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளதற்கு எனது நன்றியை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம், 2021-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எனது படைப்புக்கு, தற்போது நடைபெறும் விழாவில் தலைமைச் செயலராக பரிசு பெறுவது ஏற்புடையதாக இருக்காது. எனவே, எனது நூலுக்கு பரிசு வழங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x