Published : 29 Apr 2022 06:20 AM
Last Updated : 29 Apr 2022 06:20 AM

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆட்சியில் தகுதிக்கு ஏற்ப ஊதியம் கேட்டு அரசு மருத்துவர்கள் போராடியபோது அவர்களுக்கு துணை நிற்பதாக திமுக கூறியது. ஆனால், ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பதுபோல் தொடர்ச்சியாக மருத்துவர்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலையே உள்ளது.

ஒரு பக்கம் நீட் தேர்வை எதிர்த்து சமூகநீதி சார்ந்து மருத்துவர்களை உருவாக்க தொடர்ச்சியாக போராடி வரும் அரசு, இன்னொரு பக்கம் அதே மருத்துவர்களை வதைப்பது சரியல்ல.

மருத்துவர்களுக்குத் தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்துக்கான முதலீடுதானே தவிர செலவினம் அல்ல என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ, அதற்கான பங்களிப்பைத் தரும்அரசு மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க, தமிழகசட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை (இன்று) நடக்கும் சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x