Published : 17 May 2016 09:59 AM
Last Updated : 17 May 2016 09:59 AM
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக, மத்திய அமைச்சராக அக்கட்சியின் கடந்த கால ஆட்சியில் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தவர் மு.க.அழகிரி. அவரும் அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்பட்டு பின்னர் கட்சியைவிட்டே நீக்கப்பட்டனர்.
அதனால், அவர் திமுக மீது அதிருப்தியில் இருந்தார். இந்த தேர்தலில் அவர் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் அரசி யல் செயல்பாடுகள் இன்றியும் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று மு.க.அழகிரி வாக் களிக்கவில்லை. அவர், அவரது மனைவி காந்தி அழகிரி, மகன் துரை தயாநிதி ஆகியோர் மதுரை சத்தியசாய் நகரில் வசிக்கின்றனர். இவர்களுக்கான வாக்கு மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள டிவிஎஸ் பள்ளியில் உள்ளது. நேற்று இவர்கள் வாக் குச்சாவடிக்கு வருவார்கள் என அவரது ஆதரவாளர்கள் எதிர் பார்த்தனர். ஆனால், மு.க.அழகிரி உட்பட அவரது குடும்பத்தினர் வாக்களிக்க வரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT