Published : 24 Apr 2022 07:45 AM
Last Updated : 24 Apr 2022 07:45 AM

விவசாய கடன் அட்டை வழங்க சிறப்பு முகாம் இன்று தொடக்கம்

கோப்பு படம்

சென்னை: பிஎம் கிசான் திட்டத்தின் கீழ், விவசாய கடன் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம், சென்னையைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் மே 1 வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்றுவெளியிட்ட அறிக்கையில் ‘‘மத்தியஅரசு வழிகாட்டுதலின்படி, பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்றுமுதல் (ஏப்.24) மே 1-ம் தேதி வரைசென்னை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

இன்று நடைபெறும் சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாகமேற்கண்ட திட்ட பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x