Published : 23 Apr 2022 02:27 PM
Last Updated : 23 Apr 2022 02:27 PM

ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலக புத்தக தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையோட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தக தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து செய்தியில், ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.

— M.K.Stalin (@mkstalin) April 23, 2022

இந்த வாழ்த்து செய்தியில், "அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே!
திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் உள்ளங்கைக்கே வந்துவிடும் இக்காலத்தில், உண்மை எனும் புதையலை அடைய புத்தகங்களே வழிகாட்டி! ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வோம்! ஆழ வாசிப்போம்! புத்தகங்களை நேசிப்போம்!" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x