Last Updated : 19 May, 2016 04:19 PM

 

Published : 19 May 2016 04:19 PM
Last Updated : 19 May 2016 04:19 PM

புதுச்சேரியில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி: 15 ஆண்டுகளுக்குப் பிறகு பேரவையில் இடம்

புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாக 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டுகளுக்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து பேரவைக்குள் எம்எல்ஏக்களாக பெண்கள் நுழைகின்றனர்.

புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 15 ஆண்டுகளாக பெண்கள் இல்லாத சூழலே நிலவியது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் உறுப்பினர்களுக்கு குறைந்த அளவே கட்சிகள் வாய்ப்பு தந்தன. புதுச்சேரியில் இதுவரை 11 பேர் எம்எல்ஏ-க்களாக இருந் துள்ளனர். அதில் 2 பேர் நியமன எம்எல்ஏக்கள். முதல் சட்டப்பேரவையில் (1963 முதல் 1964) சரஸ்வதி சுப்பையா, சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2-வது சட்டப்பேரவையில் (1964-68) பத்மினி சந்திரசேகரன், அங்கம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

3-வது சட்டப் பேரவையில் (1969-74) வீரம்மாள் தேர்வு செய்யப்பட்டார். 4-வது, 5-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 6-வது சட்டப்பேரையில் (1980-83) ரேணுகா அப்பாதுரை தேர்ந் தெடுக்கப்பட்டார். அவர் அமைச்சராகவும் இருந்தார். 7-வது சட்டப் பேரவையில் (1985-90) கோமளா தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சட்டப்பேரவைக்கு செல்வி சுந்தரம் நியமன எம்எல்ஏ-வாக நியமிக்கப்பட்டார்.

8-வது சட்டப்பேரவைக்கு பெண்கள் யாரும் எம்எல்ஏ-வாக தேர்ந் தெடுக்கப்படவில்லை. 9-வது சட்டப்பேரவைக்கு 1991-ல் கே.பக்கிரி அம்மாளும், 10-வது சட்டப்பேரவைக்கு 1996ல் அரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 11-வது சட்டப்பேர வைக்கு 2001-ல் மேரிதெரசா நியமன எம்எல்ஏ-வாக இருந்தார். அதன்பிறகு பெண் எம்எல்ஏக்கள் யாரும் இல்லை.

இந்நிலையில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் 1, காங்கிரஸ் சார்பில் 1, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் 2, திமுக சார்பில்,1, பாஜக, பாமக, ஐஜேக என பல்வேறு கட்சிகள் சார்பில் மொத்தம் 12-க்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் போட்டியிட்ட வி.விஜயவேணி, என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருபுவனை (தனி) தொகுதியில் போட்டியிட்ட கோபிகா, நெடுங்காடு (தனி) தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்கா, திமுக சார்பில் காரைக்கால் நிரவி தொகுதியில் போட்டியிட்ட கீதா ஆனந்தன், உள்ளிட்ட 4 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த 2001-ம் ஆண்டுக்கு பின் பெண் எம்.எல்.ஏக்கள் இல்லாத நிலை காணப்பட்டது. இந்நிலையில் தற்போதைய தேர்தலில் முதன்முதலாக 4 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

புதுச்சேரியில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண், வாக்காளர்கள் அதிகமுள்ள நிலையில் பெண் வேட்பாளர்களும் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x