Published : 26 May 2016 10:47 AM
Last Updated : 26 May 2016 10:47 AM

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: பொதுநல மனுக்கள் மீதான விசாரணை தள்ளிவைப்பு

போதிய அனுபவம் மற்றும் திறமையில்லாத கட்சிக்காரர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கக் கூடாது என தொடரப்பட்ட பொதுநல மனுக்கள் மீதான விசாரணை ஜூலை மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

வழக்கறிஞர்கள் ஜி.கிருஷ்ண மூர்த்தி, வி.வசந்தகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுக்களில் கூறியிருப்பதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மற்றும் ஆட்சியாளர்களுக்கு விசு வாசமானவர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கின் றனர். அரசு வழக்கறிஞர் பதவி என்பது அரசியல் பதவி கிடை யாது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் நியமிக்கப்படும் அரசு தலைமை வழக்கறிஞர் பதவி யில் இருந்து மாவட்ட நீதி மன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் வரை அனைவரும் ஆளுங்கட்சியினரின் சிபாரிசு பெற்றவர்களாகவே உள்ளனர். பல வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் தங்களின் பங்களிப்பை சரிவர செய்யாததால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரப்படுவதில்லை. இதனால் கடந்த 5 ஆண்டுகளில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை யும் வெகுவாக உயர்ந்துள்ளன.

அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்யும்போது நேர்மை யான, தகுதியான, திறமையான, அனுபவசாலிகளை வெளிப்படை யான முறையில் தேர்வு செய்ய வேண்டும் என பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த உத்தரவுகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை.

எனவே அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை புதிதாக உருவாக்க வேண்டும். அது வரை தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்களை நியமிக்க இடைக்கால தடை விதிக்க வேண் டும். இவ்வாறு அதில் கோரி யிருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நடந்தது. மனுதாரர் கள் இருவரும் நேரில் ஆஜராகி அரசியலுக்கு அப்பாற்பட்டவர் களை அரசு வழக்கறிஞர்களாக நிய மிக்க வேண்டும் என வாதிட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, ‘‘தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் பதவி சரியான முறையில்தான் நிரப்பப்பட்டு வருகிறது. இதில், உச்ச நீதிமன்ற விதிமீறல்கள் இல்லை’’ என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘இதே கோரிக்கை தொடர்பான ஒரு வழக்கு தலைமை நீதிபதி அடங் கிய முதல் அமர்வில் ஏற்கெனவே நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கோடு, இந்த வழக்கு களையும் சேர்த்து விசாரிக்க உத்தர விட்டு விசாரணையை ஜூலை 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

தடை விதிக்க மறுப்பு

இதேபோல், அரசு வழக்க றிஞர்கள் நியமனம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த ஆர்.வேலுமணி உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் சி.வெங்கடேஷ் குமார் வாதிடும்போது, ‘‘அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு பிற மாநிலங்களில் தனி விதிகள் உள்ளன. தமிழகத்தில் தனி விதிகள் எதுவும் இல்லை. அரசியல் சார்புடையவர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். தேர்வுக் குழு அமைப்பதற்கு முன்பு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.

இதற்கு மறுத்த நீதிபதிகள், அரசு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும் சென்னைக்கு மாற்று வதாகஉத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x