தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட அறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் 21-ம் தேதி தென் தமிழகம், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

22-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 23-ம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24-ம் தேதி தென் தமிழகம், வட தமிழகத்தின் உள் மாவட்டங்கள், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in