Published : 22 May 2016 11:54 AM
Last Updated : 22 May 2016 11:54 AM
மத்திய தொல்பொருள் துறை சார்பில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெறும் இரண்டாம் கட்ட அகழ்வாய்வில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய சுமார் 3,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் உள்ள மத்திய தொல்பொருள் துறை அகழ்வாய்வு பிரிவு சார்பில் கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி ஜன.18-ல் தொடங்கியது. தொல்பொருள் துறை கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் உதவி தொல்லியலாளர்கள் ராஜேஷ், வீரராகவன், தொல்லியல் துறை மாணவர்கள் அகழ்வாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா `தி இந்து’விடம் நேற்று கூறியதாவது:
கீழடியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வுப் பணி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். தற்போது 52 குழிகள் தோண்டியுள்ளோம். சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் இதுவரை சுமார் 3,000-க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன. பழங்காலத் தமிழர்கள் பயன்ப டுத்திய உறுதியான எலும்பினால் ஆன எழுத்தாணி, இரும்பு ஆயுதங்கள் கிடைத்துள்ளன. பழங்காலத் தமிழர்களின் நகர, நாகரிகங் களுக்கான அடையாளங்கள் பல கிடைத்துள்ளன. பல கட்டிடங் களும் கிடைத்துள்ளன. பழங்கால தமிழர்களின் ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பண்டைய கலாச்சாரம், நகர, நாகரிகத்தை இந்த ஆதாரங்கள் மூலம் மெய்ப்பிக்கலாம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT