Published : 28 Apr 2016 08:37 AM
Last Updated : 28 Apr 2016 08:37 AM

233 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள்: இன்று ஒரே நேரத்தில் மனு தாக்கல்

தமிழகம் முழுவதும் 233 தொகு திகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட் பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை தேர் தலில் கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 227 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகின்றன. 227 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல், கடந்த 4-ம் தேதி வெளியானது. அதில், நேற்று முன்தினம் வரை 8 முறை வேட்பாளர்கள் மாற்றப்பட்டனர்.

அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் முதல்வர் ஜெய லலிதா அறிவிக்கும் நாளில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என கூறப் பட்டது. ஆனால், சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் ஜெயலிலிதா, கடந்த 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய் தார். அதிமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே அன்று மனு செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளர்கூட அப்போது மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், அதிமுகவின் 226 வேட்பாளர்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 7 வேட் பாளர்கள் என 233 பேர் இன்று தங் கள் தொகுதிகளில் வேட்பு மனுக் களை தாக்கல் செய்கின்றனர்.

வேட்பு மனு மற்றும் தேவையான ஆவணங்களை சில தினங்களுக்கு முன்பே சட்டப்பிரிவினரின் ஆலோசனை பெற்று தயார் செய்துள்ளனர். இன்று பகல் 12.50 மணிக்கு ஒரே நேரத்தில் அனைவரும் மனு தாக்கல் செய்கின்றனர். ஆர்.கே.நகரில் ஜெயலலிதா வுக்கு மாற்று வேட்பாளரும் இன்று மனு தாக்கல் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x