Published : 06 Apr 2016 08:26 AM
Last Updated : 06 Apr 2016 08:26 AM
வெளி மாநில ஒப்பந்த ஊர்திகள் ஒவ்வொரு முறை தமிழகத்திற்குள் நுழையும் போதும் கூடுதல் வரி செலுத்த வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்த சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோட்டார் வாகன வரிவிதிப்புச் சட்டத்தில் தமிழக அரசு கடந்த 2011-12-ம் ஆண்டு புதிதாக ஒரு சட்டதிருத்தம் கொண்டு வந்தது. அதன்படி, வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் ஆம்னி பேருந்து உள்ளிட்ட ஒப் பந்த ஊர்திகளுக்கு ஒவ்வொரு முறையும் கூடுதல்வரி விதிக்கப் பட்டு வருகிறது. இதற்கு முன்பாக வாரம், மாதம், மூன்று மாதம் என்ற அடிப்படையிலேயே வெளி மாநில ஆம்னி பேருந்துகள் மற்றும் ஒப்பந்த ஊர்திகளுக்கு வரி வசூலிக்கப்பட்டது.
அரசின் இந்த புதிய சட்டத் திருத்தத்தால் வெளி மாநில ஆம்னி பேருந்து கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதால் பொதுமக் களும் அவதியடைந்து வருகின்ற னர். இதனால் மக்களின் வசதிக் கேற்ப அதிகப்படியான எண்ணிக் கையில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியவில்லை. எனவே அரசின் புதிய சட்டதிருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி புதுச்சேரி மாநில ஒப்பந்த ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.ராம சுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப் போது ஆம்னி பேருந்துகளின் மோசடியைத் தடுக்கவே இத்திருத்தம் கொண்டு வரப்பட் டுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப் பட்டது. மனுதாரர் தரப்பு வழக் கறிஞர், மோசடியைத் தடுப்பதற்காக கூடுதலாக வரி விதிப்பது என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மோசடியைத் தடுக்க கடுமையான விதிமுறை களைக் கொண்டு வரவேண்டுமே தவிர அதற்காக கூடுதல் வரிவிதிப்பது என்பது தவறு என உச்ச நீதிமன்றமே பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. எனவே தமிழக அரசு கொண்டு வந்துள்ள வெளி மாநில ஒப்பந்த ஊர்திகளுக்கு கூடுதல் வரிவிதிக்கும் சட்டத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே அந்த சட்டத் திருத்தம் செல்லாது’’ என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT