Published : 20 Apr 2016 08:28 AM
Last Updated : 20 Apr 2016 08:28 AM
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது தாராபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: தாரா புரத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில், ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசி னார். அப்போது முதல்வர் ஜெய லலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராதா கிருஷ்ணன் புகார் அளித்துள் ளார். இதன்பேரில் நேற்று வழக் குப் பதிவு செய்யப்பட்டது என்றனர். பொதுக்கூட்டம் நடை பெற்று ஒரு மாதம் கடந்த நிலை யில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT