Published : 23 Apr 2016 10:10 AM
Last Updated : 23 Apr 2016 10:10 AM

தனியார் கலைக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்து மதிப்பெண்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவு கடந்த 15-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னையில் உள்ள பல தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோடம்பாக்கம் மீனாட்சி கலை அறிவியல் கல்லூரியில் நேற்று ஏராளமான மாணவிகள் விண்ணப்பங்களை வாங்கிச் சென்றனர். பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான பின்னரே அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x