போராட்டத்தில் மரணம் அடைந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு 

போராட்டத்தில் மரணம் அடைந்த விவசாயிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி: முதல்வர் அறிவிப்பு 
Updated on
1 min read

தமிழகம்: தர்மபுரியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது மரணம் அடைந்த விவசாயி குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று, உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்றதோழனாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது,

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in