Published : 21 Apr 2016 09:22 AM
Last Updated : 21 Apr 2016 09:22 AM

பிரேமலதா இன்று முதல் 2-ம் கட்ட பிரச்சாரம்

தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா, தனது 2-ம் கட்ட பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார்.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா, கடந்த 13-ம் தேதி முதல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தனது 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார். அதன்படி இன்று (21-ம் தேதி) மணப்பாறை, விராலிமலை, புதுக்கோட்டையில் பிரச்சாரம் செய்கிறார். அதைத் தொடர்ந்து 22-ல் மணச்சநல்லூர், திருச்சி மேற்கு, திருவெறும்பூர், 23-ல் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, 24-ல் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, 25-ல் கடலூர், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x