Published : 21 Apr 2016 02:20 PM
Last Updated : 21 Apr 2016 02:20 PM

பணம் கொடுத்து என்னை இழுக்க வேண்டிய அவசியமில்லை: பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. மறுப்பு

கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட அதிமுக, சாதாரண எம்.எல்.ஏ.வான என்னை பணம் கொடுத்து இழுக்க வேண்டிய அவசியம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து அதிமுகவில் முதல்வர் முன்னிலையில் சமீபத்தில் இணைந்த பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

திருவில்லிபுத்தூர் தொகுதி அதிமுக செயல்வீரர் கூட்டம் பிள்ளையார்நத்தத்தில் நேற்று நடைபெற்றது. தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ராஜவர்மன் வரவே ற்றார்.

இக்கூட்டத்தில் வெ.பொன்னு ப்பாண்டியன் எம்எல்ஏ பேசியது: மாற்றுக் கட்சி எம்எல்ஏவான நான் வந்து சேர்ந்ததால் அதிமுகவுக்கு பெரிய பலம் ஒன்றும் இல்லை. கட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்றார்.

மேலும், பொன்னுப்பாண்டியன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசுகையில், சுவரொட்டி ஒட்டும் தொண்டனாக இருந்த என்னை உயர்த்தியவர் முதல்வர் ஜெயலலிதா. கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கு அதிமுகவில் வெற்றி தேடி வரும் என்றார்.

கூட்டத்தில் திருவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர் சந்திரபிரபாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x