லால்பேட்டையில் நள்ளிரவில் முதலை பிடிபட்டது

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில்  பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர்  முதலையை  பிடித்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் முதலையை பிடித்தனர்.
Updated on
1 min read

கடலூர்: லால்பேட்டையில் வீராணம் சாலையில் இருந்த முதலையை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் பிடித்தனர்.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை வீராணம் ஏரிக்கரை சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலை ஒன்று இருந்துள்ளது.

ரம்ஜான் நோன்பு இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் அந்த சாலை வழியாக சென்ற போது முதலையை பார்த்து சிதம்பரம் வனத்துறையினருக்கும், காட்டுமன்னார்கோவில் காவல் துறையினருக்கும் தகவல் தந்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உதவியுடன், 6 அடி நீளமும் 100 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்தனர். பி்ன்னர் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குளத்தில் முதலையை விட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in