Published : 21 Apr 2016 09:13 AM
Last Updated : 21 Apr 2016 09:13 AM
இந்திய கிறிஸ்துவ முன்னணி தலைவர் எம்.எல்.சுந்தரம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 17 சதவீதம் கிறிஸ் துவர்கள் உள்ளனர். கிறிஸ்துவர்கள் அதிகம் வசிக்கும் 60 தொகுதிகளை தேர்வு செய்து, அந்த தொகுதிகளில் இந்திய கிறிஸ்துவ முன்னணி தனித்துப் போட்டியிடுகிறது. தற் போது, முதற்கட்டமாக 37 தொகுதி களை அடையாளம் கண்டு அறி வித்துள்ளோம். இரண்டாம் கட்டமாக மற்ற தொகுதிகள் பட்டியலை வெளி யிடுவோம். எங்களுக்கு பல்வேறு திருச்சபை அமைப்புகள், பாஸ்டர் கள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித் துள்ளன. எங்களுக்கு திராட்சை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக, அதிமுக உள்ளிட்ட முன்னனணி கட்சிகள், கிறிஸ்துவர்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்துக்கேற்ப கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க முன் வரவில்லை. கிறிஸ் துவ சபை ஊழியர்கள், மக்கள் தாக்கப்படுகின்றனர். கிறிஸ்துவ தேவாலயங்கள் சேதப்படுத்தப் படுகின்றன. பட்டா நிலங்களில் கூட தேவாலயங்கள் கட்ட அரசு அனுமதி பெறும் நிலை உள்ளது. கல்லறைத் தோட்டங்கள் அழிக்கப் படுகின்றன. கிறிஸ்துவர்கள் சுதந்திர மாகச் செயல்படவில்லை. கிறிஸ் துவர்களின் நலனை கருத்தில் கொண்டே போட்டியிடுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT