Published : 14 Apr 2022 07:02 AM
Last Updated : 14 Apr 2022 07:02 AM

சிவசங்கர் பாபாவுக்கு மீண்டும் சிறை: செங்கை போக்சோ நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் தனியார் உண்டு உறைவிடப் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் காஞ்சிபுரம் சிபிசிஐடி போலீஸார் 6 வழக்குகளும், சென்னை சிபிசிஐடி போலீஸார் 2 வழக்குகளும் பதிவு செய்துள்ளனர். இதில் 6 வழக்குகளுக்கான விசாரணை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்திலும், 2 வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன. மேற்கண்ட வழக்குகளில் 4-ல் பாபா ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா நேற்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி தமிழரசி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x