Published : 28 Apr 2016 08:48 AM
Last Updated : 28 Apr 2016 08:48 AM

ஊழலுக்கு எதிரான தேமுதிகவின் முயற்சி

தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஊழல் ஒழிப்பு, மது ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம், கூட்டணி ஆட்சி அம்சங்களை பிரதானமாக சொல்லி வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஊழலுக்கு எதிரானவர்களை ஒருங்கிணைக்கும் வகை யில் தேமுதிகவின் மின்னஞ்சல் முகவரியில், தங்களின் தகவல்களை தெரிவித்தால், அவர்களை தேமுதிக நிர்வாகிகள் தொடர்புகொண்டு பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 350 பேர் ஊழல் ஒழிப்புக்காக விஜயகாந்தை ஆதரிப்பதாக கூறியுள்ளனர் என்று தேமுதிக சமூக வலைதள பிரிவின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x