கரோனா விதிமீறல்: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் ரத்து

கரோனா விதிமீறல்: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகள் ரத்து
Updated on
1 min read

சென்னை: கரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுகவினர் மீது பொய் வழக்குப் பதிவு செய்வதை கைவிடக் கோரியும் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் 2020-ம் ஆண்டு கரூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி செந்தில்பாலாஜி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது நலனுக்காக போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், போராட்டத்தின்போது, விதிமுறைகள் எதையும் மீறவில்லை என்றும் செந்தில்பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in