Published : 14 Apr 2016 09:29 AM
Last Updated : 14 Apr 2016 09:29 AM
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். கோவை ஒலம்பஸ் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்தபோது செய்யவில்லை.
முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச் சொல்வார்? இந்த முறை தமிழரை ஆள வையுங்கள்.
இரு கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு பழகிவிட்டது என சொல்லாதீர்கள். சின்னத்தில் இருந்து எண்ணத்தில் இருந்து எல்லாவற்றையும் மாற்ற வேண்டும். ஒருமுறை ‘நாம் தமிழர் கட்சிக்கு’ வாக்களியுங்கள். உங்களை நம்பி நிற்கிறோம்.
இவ்வாறு சீமான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT