Published : 10 Apr 2022 08:28 AM
Last Updated : 10 Apr 2022 08:28 AM

ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட் மூலம் விண்ணுக்கு மனிதனை அனுப்ப திட்டம்: இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தகவல்

நாகர்கோவில்

“ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்தி, விண்ணுக்கு மனிதனைஅனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது” என, இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ முன்னாள் தலைவரும், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய சிறப்புபேராசிரியருமான சிவன், நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து ராக்கெட்டில் மனிதனை விண்ணுக்கு அனுப்பத் தேவையான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இச்சோதனைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து விடும்.

விண்ணுக்கு மனிதனை அனுப்புவதற்கு ஜிஎஸ்எல்வி-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தரைத்தள சோதனை முதல்கட்டமாக நடத்தப்பட்டு, பின்னர் விண்ணில் ஏவும் சோதனை நடக்க உள்ளது. முதல் 2 கட்டமாக ராக்கெட்டில் ரோபோக்கள் அனுப்பப்படும். அது வெற்றிபெற்ற பின்னர் 3-வதாக மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2,300 ஏக்கர் நிலம் தேவை. இதில், 50 சதவீத நிலங்களை தமிழக அரசு ஒப்படைத்துஉள்ளது. மீதமுள்ள நிலங்களை இன்னும் 3 மாதங்களுக்குள் ஒப்படைக்க வாய்ப்புள்ளது.

நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டவுடன் ராக்கெட் ஏவுதளம் கட்டுமானப் பணி தொடங்கும். இவ்வாறு சிவன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x