Published : 03 Apr 2016 09:58 AM
Last Updated : 03 Apr 2016 09:58 AM

வரும் 6-ம் தேதி தேமுதிக - ம.ந.கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சு?

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை வரும் 6-ம் தேதி நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி அணியில் தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. இந்நிலையில், ம.ந.கூட் டணியில் உள்ள மதிமுக, விடு தலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்களுக்கான தொகுதி களை பிரித்துக்கொள்வது தொடர் பாக கடந்த 3 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தின. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் 30 முதல் 35 இடங்கள் வரை தங்களது கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒவ்வொருவரும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே, தடா ரஹீமின் இந்திய தேசிய லீக், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் சில கிறிஸ்தவ அமைப்புகள் மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளன. எனவே, அந்த அமைப்புகளுக்கு இடங்களை ஒதுக்கலாமா அல்லது ஆதரவை மற்றும் பெற்றுக் கொள்ளலாமா என்பது தொடர்பாகவும் ஆலோ சனை நடத்தப்பட்டது.

இன்றும் பேச்சுவார்த்தை தொடரும் என தெரிகிறது. இதை யடுத்து இன்று அல்லது நாளைக் குள் எத்தனை இடங்களில் போட் டியிடுவது, எந்தெந்த தொகுதி களில் போட்டியிடுவது என்பது தொடர்பாக ம.ந.கூட்டணியினர் இறுதி முடிவை எடுக்கவுள்ளனர். இதையடுத்து, எந்தெந்த இடங் களில் போட்டியிடுவது என்பது குறித்து தேமுதிக தரப்பினருடன் ம.ந.கூட்டணியினர் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x