Published : 02 Apr 2016 08:06 PM
Last Updated : 02 Apr 2016 08:06 PM

எத்தனை கருத்துக் கணிப்பு வந்தாலும் பாஜக வெல்லும்: தமிழிசை நம்பிக்கை

எத்தனை கருத்துக் கணிப்பு வந்தாலும் பாஜக வெல்லும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

இன்று சென்னை கமலாலயத்தில் தொண்டு நிறுவனங்கள் பாஜகவுக்கு ஆதரவு தரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

''வரும் 4-ம் தேதி பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில், பாஜகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும்.

ஒரு நோக்கத்தோடு பயணித்துக்கொண்டிருக்கிறோம். எங்கள் நோக்கம் 4-ம் தேதி கூட்டணி குறித்து சுமுகமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். நோக்கம் நிறைவேறி சுமுகமாக நடைபெற்றால் நிச்சயம் அறிவிப்போம். அதற்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறோம்.

கால அவகாசம் நிறைய இருக்கிறது. நாங்கள் விரைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் கறைபடியாத ஒரே கட்சி பாஜக தான் .எத்தனை கருத்து கணிப்பு வந்தாலும் பாஜக வெல்லும்.''

இவ்வாறு தமிழிசை பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x