Published : 07 Apr 2022 09:18 AM
Last Updated : 07 Apr 2022 09:18 AM

முன்னாள் முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு

திருச்சி: சொத்து வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகேஉள்ள காதி கிராப்ட் முன் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமிமற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சட்ட விரோதமாகக் கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் முன்னாள் முதல்வர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன், ப.குமார், பரஞ்சோதி உட்பட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் 3,000 பேர் மீது கன்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x