Published : 09 Apr 2016 10:01 AM
Last Updated : 09 Apr 2016 10:01 AM
கூடங்குளத்தில் உள்ள 2-வது அணுஉலையில் இம்மாத இறுதி யில் எரிபொருள் நிரப்பும் பணி கள் நிறைவடையும் என்றும், ஜூனில் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஆர்.எஸ். சுந்தர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கூடங்குளம் முதலாவது அணு உலையில் 960 மெகாவாட் மின் உற்பத்தி தற்போது நடைபெற்று வருகிறது. முழு மின் உற்பத்தி யான ஆயிரம் மெகாவாட்டை எட்டுவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். 2-வது அணுஉலையில் இம்மாத இறுதிக்குள் எரிபொருள் நிரப்பும் பணிகள் நிறைவடையும். அதன்பின் அணுசக்தி ஒழுங்க மைப்பு வாரியத்திடம் அனுமதி பெற்று ஜூன் மாதத்தில் மின்உற்பத்தி தொடங்கும். கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலைகளை அமைப்பதற்கான அகழ்வு பணி கள் இவ்வாண்டு இறுதிக்குள் தொடங்கும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT