நாளை முதல் 5 நாட்கள்: கனிமொழி தேர்தல் பிரச்சாரம்

நாளை முதல் 5 நாட்கள்: கனிமொழி தேர்தல் பிரச்சாரம்
Updated on
1 min read

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநிலங் களவை குழுத் தலைவர் கனிமொழி, தனது பிரச்சாரத்தை நாளை சேலத்தில் தொடங்குகிறார்.

இது தொடர்பாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி வரும் 18-ம் தேதி சேலத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். 19-ம் தேதி - நாமக்கல், 20 - ஈரோடு, 21 - திருப்பூர், 22 - கோவை ஆகிய மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்வார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி வரும் 23-ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி மே 14-ம் தேதி வரை 14 நாட்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார். பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை கடந்த 15-ம் தேதி மதுரையில் தொடங்கினார். 22-ம் தேதி வரை 12 மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in