Published : 28 Apr 2016 12:23 PM
Last Updated : 28 Apr 2016 12:23 PM
பொள்ளாச்சி அடுத்த வடக்கிப்பாளையம் பகுதியில் உள்ள அதிமுக ஆதரவாளரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
பொள்ளாச்சியை அடுத்த சி.கோபாலபுரம் பிரிவில் உள்ள பண்ணை வீட்டில் வேட்பாளர் மற்றும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவை மாவட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு மற்றும் தேர்தல் செலவினம் மற்றும் தணிக்கைப் பிரிவு பார்வையாளர் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
வாக்காளர்களுக்கு தர பதுக்கப்பட்ட பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் எனக் கூறி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT